Thursday, August 13, 2009

ஈழப்போரின் இறுதி நாட்கள்


ம்மாத 'காலச்சுவடு' இதழில் 'ஈழப்போரின் இறுதி நாட்கள்' என்ற மனம் பதைக்க வைக்கும் நீள்கட்டுரை வெளியாகியிருக்கிறது. புலி ஆதரவாளர்கள், அரச ஆதரவாளர்கள் எல்லோரும் தங்கள் தங்கள் முன்முடிவுகளையும் சாய்வுகளையும் சற்றே தள்ளிவைத்து விட்டு நிதானமாகப் படிக்க வேண்டிய கட்டுரையிது.

இந்தக் கட்டுரை ராஜபக்ஷவின் கைக்கூலிகளால் எழுதப்பட்டது என்றோ, ஒட்டுக்குழுக்களின் சித்துவேலை என்றோ பழிக்கப்படலாம் அல்லது இதைக் கண்டுகொள்ளாமலே விடும் தந்திரமும் நடக்கலாம். ஒருவர் உண்மையை எதிர்கொள்ள மறுப்பதால் உண்மைக்கு இழப்பு ஏதுமில்லை என்பதைத்தான் இப்போதைக்குச் சொல்லிவைக்க முடிகிறது.


கட்டுரையைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

Wednesday, August 12, 2009

shobasakthi.com

தோழர்களே, இன்றுடன் இந்த வலைப்பதிவு நிறுத்தப்படுகிறது. எனது எழுத்துகளை ஒருங்கிணைத்து http://www.shobasakthi.com/ உருவாக்கப்பட்டுள்ளது. இனி அங்கே வாருங்கள்! நன்றி.