Friday, April 03, 2009

பன்னாட்டு கண்டன ஆர்ப்பாட்டம்

இடம்: மெமோரியல் ஹால்
நாள்: 08-04-2009
நேரம்: மாலை 3-6 மணி

தோழர்களே! இலங்கைத் தமிழர்களை படுகொலை செய்வதை நிறுத்தக் கோரியும் தமிழ்ப் பகுதிகளிலிருந்து படைகளை திரும்பப் பெற கோரியும் பன்னாட்டு அளவில் இலங்கை அரசை வற்புறுத்த வேண்டிய ஒரு காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். சர்வதேச அளவில் நமக்குள்ள தொடர்புகளைப் பயன்படுத்தி பாசிச இலங்கை அரசு குறித்தும் இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது குறித்தும் உலக அளவிலான மனித உரிமைப் போராளிகள், தொழிலாளர் இயக்கங்கள், ஜனநாயக சக்திகள், மற்றும் இடது சாரிகள் அகியோரின் கவனத்தை ஈர்ப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது‘இலங்கையில் போரை நிறுத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டும் குழு’

இக்குழு இந்த நோக்கங்களுக்காக வரும் 8.04.2009 அன்று உலகெங்கிலும் உள்ள முக்கிய நகரங்களில் சாத்தியமான அளவிற்கு ஆர்பாட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது.அதே நேரத்தில் சென்னையிலும் மேலே குறிப்பிட்டவாறு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.இலங்கையில் போரை நிறுத்துவதற்கும், தமிழர்களை படுகொலை செய்வதை முடிவுக்கு கொண்டு வருவதற்கும், இந்தியா உள்ளிட்ட ‘உலக நாடுகள்’ இலங்கைக்கு உதவி செய்வதை எதிர்த்தும் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளாக பங்கு பெறுமாறு வேண்டுகிறோம்.

ஈழப் பிரச்சனையில் அக்கறை உள்ள இயக்கப் பிரதிநிதிகள் பலரும் பங்கு பெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நீங்களும் பங்குபெறுவீர்!

கண்டன உரைகள்:

பேரா.அ.மார்க்ஸ், ஒருங்கிணைப்பாளர் அணிதிரட்டும் குழு

கோ.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி

பாவேந்தன், செயலர் தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்

முனைவர் ப. சிவக்குமார், முன்னாள் அரசுக் கல்லூரி முதல்வர்

துரைசிங்கவேல், புதிய போராளி இதழ்

அருள் எழிலன், பத்திரிகையாளர், சென்னை

மோகன்,பொதுச்செயலாளர், சென்னை பத்திரிகையாளர் சங்கம்.

உதயம் மனோகரன், மக்கள் வழக்குறைஞர் சங்கம், சென்னை.

மோகன் குமார், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், கோவை

இசையரசன், ‘தண்டோரா’ அமைப்பு

கென்னடி, மக்கள் போராட்ட மையம்,கொள்ளிடம்

கீதா, அமைப்பு சாரா தொழிலாளர் தேசீய இயக்கம்.

காதர் ஷெரீப், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்,காஞ்சிபுரம்

ஜெயக்குமார், வழக்குறைஞர், சென்னை

வெங்கட், புதிய சோசலிச மாற்று

ஜென்னி, அணி திரட்டும் குழு

இலங்கை அரசே, போரை நிறுத்து!
தமிழர்களை கொல்லாதே!
இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளே! பாசிச இலங்கை அரசுக்கு உதவாதீர்!!

-இலங்கையில் போரை நிறுத்தி ஜனநாயகத்தை நிலைநாட்ட அணிதிரட்டும் குழு

No comments: